சிவகங்கை ஆக:13
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில் மழை நீரை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மின்னணு வீடியோ விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் தொடங்கி வைத்து பேசும்போது அவர் குறிப்பிட்டதாவது
மேலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மழை நீர் என்பது இயற்கை தந்த ஒரு பெரிய வரமாகும் எனவே இந்த மழை நீரை சேகரிப்பு செய்வது என்பது அவசியமாக இருக்கிறது. மழை நீரை சேகரிப்பதால் ஆழ் குழாய் கிணறுகளிலும் குளங்களிலும் கிணறுகளிலும் மற்ற நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயருகிறது. எனவே வீடுகள் அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் மழைநீர் சேகரிப்பின் அமைப்பு உருவாக்கி அவற்றை நாம் சேமிக்க வேண்டும்
மேலும் பருவ காலங்களில் அறிதாகக் கிடைக்கும் மழை நீரை சேகரிப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை நாம் தீர்க்க முடியும் இவற்றை மனதில் கொண்டு மனித சமூகங்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்
அதன் பின்னர் மகளிர் கல்லூரி மாணவிகள் தங்களின் கல்லூரியில் இருந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களின் வழியாக ஊர்வலமாக வந்தனர் பின்னர் இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதியில் வழியாக சுற்றி வந்தது ஊர்வலத்தின் போது மாணவிகள் மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணியில் நிர்வாக பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள்
துணை நில நீர் வல்லுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.