கரூர் மாவட்டம் – மே – 17
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் வாட்டி வதைத்து வரும் நிலையில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம், முழுவதும் காலை முழுவதும் வெயில் தாக்கம் இருந்த நிலையில் மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், பரமத்தி, வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை செய்தது.பள்ளப்பட்டி கணக்குப்பிள்ளை தெரு பகுதியில் சுமார் அரை மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மழைநீர் வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி.