தருமபுரியில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் ரயில்வே மேம்பாலம் மற்றும் சிப்காட் பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிப்காட் பணியின் முன்னேற்றம் குறித்தும்,தர்மபுரி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும், சுமார் ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் தருமபுரி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாம்பட்டி-பாரதிபுரம் ரயில்வே மேம்பாலம் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சாந்தி,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்.வழக்கறிஞர்.ஆ.மணி,
முன்னாள் எம்.எல்.ஏகள்,தடங்கம் சுப்ரமணி,பி.என்.பி.இன்பசேகரன்,மாவட்ட வருவாய் அலுவலர் பிரின்சிலி ராஜ்குமார்,வட்டாச்சியர் ஜெயசெல்வம்,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.