கரூர் மாவட்டம், அக்டோபர் – 27
கரூர் கிச்சா சிலம்பம் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு…
கடந்த 20 ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் குரு ஞானசம்பந்தர்
மிசின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் SGFI ல் கட்கா என்ற புதிய விளையாட்டுப் போட்டி மாநில அளவில் தேர்வுப் போட்டி உமாநாத் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில்
நடைபெற்றது .
அதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் அண்டர் 17 மற்று 19 பிரிவுகளில் கலந்து கொண்டு மாநில அளவில் விளையாடி தேர்ச்சி பெற்று
தேசிய அளவில் நடக்க இருக்கும் கட்கா போட்டிக்கு மாணவிகள் ஷஸ்மிதா ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் பள்ளி காயத்திரி
அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவன் சந்துரு கொங்கு வெள்ளாளர் பள்ளி ஆகியோர் தேர்வாகி டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான கட்கா போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள்.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் தகுதிச் சான்றிதழை வழங்கினார். பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அமெச்சூர்
கட்கா வெல்பர் அசோசியேஷன் தலைவர் சோலை, பொதுச் செயலாளர் மாங்க் பிரசாத், மற்றும் தலைமை பயிற்சியாளர் முத்துக்குமார் மற்றும் கரூர் மாவட்ட பயிற்சியாளர் வீரமணி உடன் இருந்தனர்.
இந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் கிச்சா சிலம்ப அகாடமியில் பயிற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.