புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலக தேர்வு கூடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா திலகவதி செந்தில் சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மற்றும் எம்.லியாகத் அலி, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.



