முதுகுளத்தூர்.28
முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற்றது, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜார் மற்றும் முக்கியவீதிகல், வெண்ணீர்வாய்க்கால், வேங்கக்குறிச்சி, விளங்களத்தூர் குறிப்பாக முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி செல்லும் சாலை தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடந்து செல்பவர்களையும் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்களையும் தெரு நாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன. இரவு நேரங்களில் ரோட்டின் ஓரத்தில் கூட்டமாக படுத்து உறங்கும் நாய்கள் தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன. மேலும் தெரு நாய்களுக்குள் சண்டை நடக்கும் போது ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது நாய்கள் விழும் நிலை உள்ளது. இதனால் பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் சிறுவர்கள் பீதி அடைகின்றனர். அதே நேரத்தில் சிலர் வளர்ப்பு நாய்களை சிலர் சாலையில் விடுவதாகவும் அதனை கேள்வி கேட்டல் அவர்களையும் நாயை வைத்து துரத்துவதாகவும் தகவல் கிடைத்தது இப்படி சேயும் நாய்கள் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றி, நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.