நாகர்கோவில் ஜூன் 4
கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 17.ம்தேதி அன்று காலை 10. மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் (அல்லது) தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல்பகுதியில் ‘தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் – ஜூன் 2025’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் மனுக்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் 10.06.2025.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.