திருப்பத்தூர்:ஜூன்:15,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முறிந்து விழும் நிலையில் பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சாலையில் செல்லும்போது பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
தூய நெஞ்சக் கல்லூரி மற்றும் டோமினிக் சாவியோ அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட மரங்கள் காய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள்,பணியாளர்கள், ஊழியர்கள், சிறு வியாபாரிகள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் சென்று வருகின்றனர். இது சம்மந்தமான பதிவினை சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் வாட்சப் தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.