சிவகங்கை
டிச:01
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காளையார்கோவில் தாலுகா காஞ்சிப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த விவசாயி மற்றும் தன்னார்வலர் பன்னீர்செல்வம் எழுந்து பேசும் போது காளையார்கோவில் தாலுகாவில் உள்ள வருவாய்க் கிராம பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய விளைச்சலே இல்லை நாங்கள் பயிர்க் காப்பீடு செய்திருந்தோம் ஆனாலும் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை இது இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அதிக வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நடப்பு 2024 -25 ம் ஆண்டிற்கும் விவசாய காப்பீடு செய்து இருக்கிறோம் இப்போது சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை எனவே இந்த ஆண்டாவது அரசு விவசாயிகளுக்கு உரிய பயிர்க் காப்பீடை வழங்க வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் விவசாய அமைப்பில் பொறுப்பில் இருக்கும் கோபால் பேசும் போது விளைச்சல் இல்லாமல் போய்விடும் நிலையில் இழப்பீட்டை பெறுவதற்காகக்தான் காப்பீடு செய்கிறோம் ஆனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்ட போதும் கூட இன்சூரன்ஸ் தொகையை வழங்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டும் இழப்பீடு வழங்காவிட்டால் விவசாய அமைப்புகளின் சார்பில் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடைபெறும் என்றார்.
தொடர்ந்து
திருப்புவனம் பகுதி விவசாயிகள் பேசுகையில் விவசாயப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் மற்றும் முயல்கள் சேதத்தை ஏற்படுத்தி வருவதால் வனத்துறையின் சார்பில் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதனை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த கூட்டத்தின் போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.