தருமபுரியில் இந்திய மூல நிவாச காவல் படை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் ஜாதி மறுப்பு மற்றும்காதல் திருமணம் செய்த ஜோடிக்கு ஆதரவளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க ஜாதி வெறி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரியும் ஜாதி ஆவணப் படுகொலையை தடுத்து தனி சட்டம் இயற்றிடவும் கள்ளச்சாராயம்,கஞ்சா, சந்து கடை, மது வியாபாரம் ஆகியவை உடனடியாகதமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மார்க் கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட செயலாளர் குமார்,இந்திய மூல நிவாசி காவல் படை மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழழுதன், தருமபுரி மண்டல செயலாளர் தீனா, மாவட்ட தலைவர் பிரசாந்த், மாவட்டச் செயலாளர் திருமாவளவன், தலித் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் நாகேந்திரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பாழமுனுசாமி மற்றும் இந்திய மூல நிவாச காவல் படை அமைப்பைசார்ந்த மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
காவல் படை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics