தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பாக தமிழக அரசை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமையில் சென்னையில் வழக்கறிஞர் கௌதமன் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலை செய்த குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்தும் தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்காத தமிழ்நாடு அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் மாடக்கண்ணு முன்னிலை வகித்தார்,செயலாளர் அருண், கார்த்திக் குமார் மற்றும் தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்