ராமநாதபுரம், டிச.7-
வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரியும், வக்பு சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பதை தடுக்கக் கோரியும்
பல்லாயிரம் முஸ்லிம் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் இடித்து வருகின்ற செயலை கண்டித்தும்
தமுமுக சார்பில் மாபெரும் கண்டனர் ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார்.
மே17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி, தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா,
இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர். அப்துல் காதர், மமக தலைமை பிரதிநிதிகள் உசேன் கனி, சம்சுதீன் சேட், தமுமுக மகளிர் பேரவை மாநில பொருளர்
ஷான் ராணி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தமுமுக ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, ராமநாதபுரம் மத்தி மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர், சிவகங்கை மாவட்ட தலைவர் துல்கருணை சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மண்டலத்தில் இருந்து மாவட்ட ,ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.



