நிலக்கோட்டை அக்.09:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக செயலாளர் நத்தம் விஸ்வநாதன். வழிகாட்டுதலின் படி சொத்துவரி உயர்வு மின்கட்டண உயர்வு பத்திரப் பதிவு உயர்வு உள்ளிட்ட ஏழை எளிய பொதுமக்களை பாதிக்ககூடிய பன்மடங்கு கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெற கோரியும் 40 மாதங்களாக பொதுமக்களுக்கு எந்த ஒரு நலனையும் செய்யவில்லை எனக் கூறியும் ஒன்றியச் செயலாளர் யாகப்பன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளருமான உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் நகரச் செயலாளர்கள் தண்டபாணி சேகர். அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டு ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று கண்டனங்களை பதிவு செய்தனர்.