தஞ்சாவூர் டிச.15
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே உள்ள குருவி கரம்பை ஊராட்சி முத்து மாரியம்ம ன் கோவில் வளாகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது
முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் முன்னிலை வகித்தார் .வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் வீட்டு மனை பட்டா, திருமண உதவித்தொகை, ஈம சடங்கு உதவித்தொகை ,கல்வி உதவித்தொகை உள்ப்பட மொத்தம் ரூபாய் 11 இலட்சத்து88 ஆயிரத்து 98மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி பேசினார்
அப்போது அவர் கூறுகையில்:
பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழுவில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கியில் மூலம் குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது தனியாரிடம் அதிக வட்டி என்ற வலையில் சிக்கிக் கொள்ள வேண்டிய துயரம் இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நாளென்று க்கு சராசரியாக 27 ஆயிரம் பேர் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தனர். தற்போது சராசரியாக1 லட்சம் பேர் வேலை செய்து வருகிறார்கள்.
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு தேவைப்படுபவர் களுக்கு உடனடியாக வீடு வழங்கப்படும். வீடு ஒதுக்கீடு கிடைக்கப்பெறும் பயனாளிகள் தாமதம் இல்லாமல் வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை நல வாரியத்தில் இணைத்துக்கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்
அதுபோல் காப்பீடு திட்ட அட்டைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்பாராத நேரத்தில் நமக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியும்
இது போன்ற மக்கள் நேர்காணல் முகாமில் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும். என்றார்
முகாமில் பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் குமார், தாசில்தார் தெய்வானை, ஒன்றிய குழு தலைவர் முத்து மாணிக்கம் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மாவட்ட கவுன்சிலர்கள் சுவாதி ,காமராஜ் இலக்கியா, நெப்போலியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.நிறைவாக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை தாசில்தார் சங்கர் நன்றி கூறினார்.