திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அய்யலூர் ரஞ்சித் துவக்கப்பள்ளியில்
கல்வி, மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா.
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக கல்வி, மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் உள்ள ரஞ்சித் துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மணவை கிங்ஸ் ரோட்டரி கலை மன்ற மாவட்ட இணைச்செயலாளர் Rtn.Y.மணவை பங்கிராஜ், புனித அந்தோணியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எமரிட்டஸ் பேராசிரியர் Dr.R.மனோகரன்,திண்டுக்கல்
மேற்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.P.A.P.நாதன்,
திண்டுக்கல்
மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி
Rtn. இருதயராஜா, Rtn. சேவியர்,Rtn. ரெங்கையா,
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற துவக்கப்பள்ளி மாணவ , மாணவிகளுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும்,
பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை போடாமல் வந்த ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அய்யலூர் ரஞ்சித் துவக்கப்பள்ளியின் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மேற்கு
ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.