தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் புதிதாக தமிழகத்தில் 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து கல்லூரி துவங்குவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்ற நிலையில் மதுரை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் மானாமதுரை மற்றும் நத்தம் ஆகிய இரண்டு புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மானாமதுரை- மதுரை நான்கு வழி சாலையில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது . இதற்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று கல்லூரியின் முதல்வராக பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின் வரலாற்று துறை இணைப்பேராசிரியர் முனைவர் கோவிந்தன், மதுரை மண்டல கல்லூரி இணை இயக்குனர் முனைவர் குணசேகரன் முன்னிலையில் முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் அறிவழகன், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மானாமதுரை புதிய அரசு கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்பு.

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics