கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டகாரம் ஊராட்சி .குள்ளம்பட்டி ஊராட்சி வெப்பலம்பட்டி ஊராட்சி, ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். முன்னதாக இன்று காலை பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி ஒன்றிய கழக செயலாளர் சாந்தமூர்த்தி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.இதில் குள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி காட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர்.ரங்கநாதன், வேப்பாலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கலா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.23 துறைகளை சார்ந்த அலுவலர்கள் துறைவாரியாக இருந்த காரணத்தால் பொது மக்கள் தங்களது மனுக்களை நேரடியாக துறை சார்ந்த அலுவலர்களிடம் அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் ஆன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற முகாமில் மனுகள் பெறப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ராஜேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராகேஷ் சர்மா, சந்தூர் கிராம நிர்வாக அலுவலர் லெனின் முகாமில் கலந்து கொண்டனர் பொது மக்கள் தாங்கள் அளித்த மனுவிற்கு 30 நாட்களுக்குள் கட்டாயம் பதில் அளிக்கப்பட்டுவிடும், அப்படி மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும்.இந்நிகழ்வினை மூன்று ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒருங்கிணந்து செயல்படுத்தினர்.
மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics