கன்னியாகுமரி,செப்.18-
பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்கள்,நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதேபோல் சர்வதேச சுற்றுலா தலமன கன்னியாகுமரியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் 74 பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ் தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் தர்மராஜ் கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார். இதில் சுயம்புலிங்கம்,ஜெய ஆனந்த், செல்வ சுப்பிரமணியன்,கண்ணன்,ராம்தாஸ்,ராம தாணுலிங்கம், கோகுல்காந்த்,சக்திவேல் உட்பட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.