முன்னதாக மூலவர் தண்டீஸ்வரர் அய்யனாருக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்கள் பக்தர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
அதன் பின்னர் ஆதிமூல லிங்கத்திற்கும் நந்தியப் பெருமானுக்கும் குரு பகவான் தட்சிணாமூர்த்திக்கும் இந்த அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு தரிசனம் காண அல்லிநகரம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏறாளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அய்யன் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.