திருவள்ளூர் மாவட்டத்தில்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்
நேற்றைய தினம் ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் தாலுகா போலீசருக்கு ரகசிய தகவல் கிடைக்கபட்டது
இதனை அறிந்த தாலுகா போலீசார் பட்டறை பெருமந்தூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக என் கொண்ட பாஸ்ட் ட்ராக் காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் அத்தகைய காரில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டறிந்தனர்.
அதனைத்
தொடர்ந்து அவர்களை காருடன் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உளுந்தை முதுகூர் பகுதியைச் சேர்ந்த
ராமச்சந்திரன் -52 இன்பராஜ்-25 திரவியக்குமார் -38 ஆகியோர் கூட்டாக சேர்ந்து கடத்தி வந்த பாஸ்ட் ட்ராக் வாகனத்தையும் 195 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து
மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.