வேலூர்_27
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தானியங்கள், காய்கறிகள் மற்றும் மீன், கோழி,ஆடு போன்றவை சென்னைக்கு விற்பனைக்காக லாரிகள், பிக்அப் வாகனங்கள் எடுத்துச் செல்வார்கள்.
இந்த சமயத்தில் அண்டை மாநிலங்களில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கஞ்சா போன்றவைகள் கடத்தி வரப்படுவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் அங்கு வாகன சோதனை செய்து கஞ்சா குட்கா போன்றவைகளை பறிமுதல் செய்வார்கள்
இதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் சுங்கச்சாவடியில் வாகன சோதனை உத்தரவிட்டிருந்தன
உத்தரவின் பேரில் பள்ளிகொண்ட காவல்துறையினர் சுங்க சாவடியில் இரவு நேரங்களில் வாகன சோதனைகள் ஈடுபடவே வேண்டும்
ஆனால் வாகன சோதனை செய்யாமல் வெளி ஊர்களில் இருந்து வாகனங்களை பணம் வாங்கிக் கொண்டு விட்டு விடுகின்றன.
லஞ்சம் குறித்து சமூக ஆர்வலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.