தென்தாமரைகும்,செப்.2-
குமரி மாவட்டம் கரும்பாட்டூர் ஊராட்சியில் பிளஸ் ஸ்டரஸ் பிளானட் பவுண்டேஷன் சார்பில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.இதில் பஞ்சாயத்து தலைவி தங்கமலர் சிவபெருமான் ,ஊராட்சி செயலர் காளியப்பன் உட்பட பல பங்கேற்றனர்.