திருப்பூர் ஜூலை: 2 அவிநாசி ரோடு பகுதியில் அமைந்துள்ள
A. G.சபை.
மேற்படி இடம் A.G.சபையின் ஸ்தாபனத்திற்கு பத்திரப்படி பாத்தியப்பட்டது. இந்த சபையில் 1000 பேருக்கு மேற்பட்டவர்கள் ஆராதனையில் பங்கு பெற்று வருகின்றனர். இந்த சபை கடந்த 1951-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சபையில் ஏற்கனவே பராமானந்தம் என்பவர் மதபோதகராக பணியாற்றி வந்தார்.இவர் பாலியல் குற்ற செயலில் ஈடுபட்டதால் A.G.சபை தலைமை நிர்வாகம் இவர் மீது மத ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்பு மதபோதகர் பரமானந்தம் அவரது ஆட்களுடன் வந்து கடந்த 27.02.2022 அன்று பிரச்சினை செய்து உள்ளார். இது காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட பின்பு திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வந்து A.G.சபையின் கதவை பூட்டி விட்டு சாவி எடுத்து சென்றுவிட்டனர். அதன்பின் 107 Cr.Pc. இரு தரப்பினர் மீதும் பதியப்பட்டது. அந்த விசாரணை வருவாய் கோட்டாட்சியரால் முடிக்கப்பட்ட பின்பும் இன்று வரை A.G. சபையை கடந்த 2 ½ ஆண்டுகளாக திறந்து விடாமல் இன்று வரை மூடப்பட்டு உள்ளது.
எனவே A.G. சபையினை திறந்து மக்களின் வழிபாட்டிற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.