வேலூர்=21
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டாவில் ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது அந்தப் பள்ளியை 2029 ஆம் ஆண்டு வரையில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு வாடகை தருவதாக பேசி . 150 மாணவர்கள் இருப்பதாக சொல்லி அந்த இடத்தை வாடகைக்கு எடுத்ததாக தெரிகிறது ஆனால் ஒரு மாணவரோ, ஆசிரியரோ கிடையாது. நாங்கள் இரண்டு ஆண்டுகளாக இதுவரையில் அந்த பள்ளிக்கு ரூ.45 லட் சம் செலவழித்து 100 மாண வர்களுக்கு சேர்க்கையை உருவாக்கி பள்ளியை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் அந்த பள்ளியை குத்தகைக்கு விட்ட லோகநாதன், அவரது மனைவி ஜீவ பிரியா, குணசேகரன் ஆகியோர் எங்களை பள்ளியை விட்டு வெளியேற சொல்லியும் பள்ளியை நடத்தவிடாமல் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும் நாங்கள் கொடுத்த ரூ.10 லட்சம் குத்தகை பணத்தையும் தர மறுத்து மாணவர்கள் இப்பள்ளிக்கு வரகூடாது என அவர்களே நோட்டீசும் ஒட்டுகிறார் கள். எனவே, கொலை மிரட்டல் விடுத்து மாணவர்களை பள்ளியை விட்டு அனுப்பும் நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.இந்தப் பள்ளி தொடர்ந்து நடைபெறும் மாணவர் மாணவிகள் பெற்றோர் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று இந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics