கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 287 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, தலா ரூ.7,900 வீதம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23 ஆயிரத்து 700 மதிப்பில் சக்கர நாற்காலிகளும், தலா ரூ.5,500 வீதம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால்களும், 4 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் பிரைலி வாட்ச்களும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,605 மதிப்பில் ஊன்று கோல்கள் என மொத்தம் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84 ஆயிரத்து 305 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் .பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) .சுந்தராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .முருகேசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்