தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட இதர உதவி தொகைகளை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 526 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு ஊதிய தீர்வினை உடனுக்குடன் வழங்க வேண்டும். என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதில் சப் கலெக்டர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.