கிருஷ்ணகிரி: செப்: 24:கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 335 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலை பண்பாட்டுத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3 நபர்களுக்கு ரூ.75 ஆயிரமும், திருமண உதவித்தொகை 5 நபர்களுக்கு ரூ.25 ஆயிரமும், தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை 2 நபர்களுக்கு ரூ.12 ஆயிரமும், முதுகலை பட்டப்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை 1 நபருக்கு ரூ.4 ஆயிரமும், 12 -ம் வகுப்பு கல்வி உதவித்தொகை 3 நபர்களுக்கு ரூ.4500 -ம், 10 -ம் வகுப்பு கல்வி உதவித்தொகை 3 நபர்களுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 23 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) .பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .பத்மலதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (நிலம்) .சுந்தராஜ், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய நிர்வாகக்குழு உறுப்பினர் .ஆதவன் தீட்சன்யா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.