அரியலூர், செப்;03
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 543 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலம், எலந்தக்கூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.50,000 கடனுதவி மற்றும் இலுப்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 07 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25,01,000 மதிப்பில் பயிர் கடனுதவிகளும் என மொத்தம் ரூ.25,51,000 மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்