நாகர்கோவில் – அக்- 25,
கன்னியாகுமரி மாவட்டம் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாநகராட்சி மேயர் ரெ . மகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களின் குடிநீர், தெரு விளக்கு , கழிவுநீர் ஓடை பராமறிப்பு போன்ற புகார்களை பொதுமக்கள் மனுக்களாக மேயர். மகேஷ் இடம் நேரில் அளித்தனர். புகார்களை பெற்றுக் கொண்டு புகார்கள் பற்றி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திட உத்தரவிடப்பட்டது. மேலும் நாகர்கோவில் மேலகலுங்கடி பகுதியை சார்ந்த மாற்றுதிறனாளி ஆனந்த தனேஷ் தன்னுடைய சுயத்தொழிலுக்காக கம்ப்யூட்டர் தேவை என மேயர் ரெ.மகேஷ் இடம் மாநகராட்சி அலுவலக மனுநீதி முகாமில் சந்தித்து மனு கொடுக்க வந்திருந்தார் . தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து சென்று மாற்று திறனாளியிடம் சென்று கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்டு அவரிடம் மாநகராட்சி சார்பாக தனிநபருக்கு இந்த உதவி செய்ய இயலாது ஆகையால் தனது சொந்த நிதியிலிருந்து வாங்கி தரலாம் என உறுதி அளித்தார். உடன் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தார்கள்.