தருமபுரி மாவட்டத்தில் உயர்நீதிமன்றம் ஆணைப்படி நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள விவரங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது. சென்னைஐகோர்ட்டு மதுரை கிளை பொது இடங்களில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் மதம், இதர அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அவ்வாறான கொடிகம்பங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் அடுத்த மாதம் 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அதன் பிறகும் அந்த கொடி கம்பங்கள் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அந்த கொடி கம்பங்கள் அகற்றப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய அறிவிப்புக்கள் அளித்து அந்த கொடி கம்பங்களை அகற்றி அதற்கான செலவை சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் வசூலிக்கப்படும். எனவே தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற அனைத்து கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, அரூர் உதவி கலெக்டர் சின்னசாமி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தமிழக வெற்றி கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics