தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் 1 தங்கம் மற்றும் 4 வெண்கல பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் T-38 பிரிவில் செல்வன்.முகமது நசீர் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், F-55 செல்வி.பொன் மோனிஷா வட்ட எறிதலில் மூன்றாம் மற்றும் ஈட்டி எறிதல் இரண்டாம் இடமும் ,T-40 பிரிவில் செல்வி.பேபி ஷாலினி ஈட்டி எரிதலில் மூன்றாவது இடமும் , T-20 பிரிவில் செல்வி.ஜாய் ஜெரிக்கா குண்டு எறிதலில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி. உடன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா , மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மண்டல தலைவர் அன்னலட்சுமி , மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், தனலட்சுமி , நாகேஸ்வரி மற்றும் பாரா ஒலிம்பிக் பயிற்சியாளர் ஸ்டீபன் மற்றும் ஜேஸ்பர் மாநகராட்சி மேயர் நேர்முக உதவியாளர் ஜேஸ்பர், பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்
பாரா தடகள விளையாட்டுப் போட்டி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics