தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் அதியமான் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னில வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வரவேற்புரை ஆற்றினார். இந்த பள்ளி நூற்றாண்டு விழாவை மாவட்ட ஆட்சியர் சதீஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நூற்றாண்டு சுடர் ஒளியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இணைப்பு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக பணிபுரியும் ஆசிரியைகளுக்கு பட்டுப்புடவை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் ஆட்சியர் பேசுகையில் எங்களின் அடிப்படை உரிமையை எங்களுக்கு உறுதி செய்தது அரசு பள்ளியே அரசு பள்ளியே, நம் அடையாளம் ,அதுவே நம் வழிகாட்டி நம் ஆசிரியர்களை நம் கலங்கரை விளக்கம், அனைவருக்கும் சமத்துவமான கல்வியை சமூக நீதியுடன் உறுதி செய்த அரசு பள்ளியின் வளர்ச்சி என்பது நம் அனைவரின் கூட்டிட்டுப் பொறுப்பு பல்வேறு வளர்ச்சிக்கு துணை நிற்பதை உதவியாகக் கருதாமல் நம் கடமையாகக் கருதுவோம் என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம் ,அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



