வேலூர்-13
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், செம்பேடு கிராமம், பிள்ளையார் கோயில் வீதியில் அமைந்துள்ள பஜனை கோயிலில் ஸ்ரீ சபரி மலை வாசன் பக்த சபையால் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் ஐயப்பன் பஞ்சலோக சிலைக்கு பிராண பிரதிஷ்டையும், மகா அபிஷேகமும் ,மகா தீபாராதனையும், ஸ்ரீ சபரிமலை வாசன் ஐயப்ப சுவாமியின் திருவிதி உலாவும், வெகு விமரிசியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கோ பூஜை, கணபதி ஹோமம், கலச பூஜை ,பிரான பிரதிஷ்டை, மகா அபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சியில் குருசாமி கே. மூர்த்தி ,ஜி. சுரேஷ், எஸ். தயாநிதி, எஸ் .கார்த்தி ,வி. வினோத்குமார், இ. கௌதம் ,செல்வராஜ், தினகரன், ஸ்ரீ சபரிமலை வசன் ஐயப்ப பக்த சபையினர்கள், மற்றும் விழா குழுவினர்கள், இளைஞர்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.