மார்ச்: 31
பல்லடம் நகராட்சி, மங்கலம் சாலை கரையான்புதூரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.72.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.06, கரையான்புதூர் சாலை முதல் மங்கலம் சாலை வரையிலும், ரூ.61.30 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.10, அம்மாபாளையம் முதல் சாலை முதல் குறுக்கு வீதி, பாரதிபுரம், வார்டு எண்.12 திருச்சி சாலை முதல் அண்ணாநகர் எல்லை வரையிலும், வார்டு எண்.13 சோமுசெட்டியார் தோட்டம் முதல் மற்றும் குறுக்கு வீதிகளில் தார் சாலை மேம்பாட்டுப்பணிகளையும், ரூ.66.70 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.14, ஹாஸ்டல் காலனி முதல் கொசவம்பாளையம் சாலை மற்றும் வார்டு எண்.17 ஹாஸ்டல் சாலையில் பழுதடைந்துள்ள தார் சாலை என மொத்தம் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் தார் சாலை மேம்பாட்டுப்பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், பல்லடம் நகர்மன்றத்தலைவர் திருமதி கவிதாமணி ராஜேந்திரகுமார் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை திருமதி. அ.ஜோதிமணி
திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரே.சுரேஷ், முதல்வர், புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முனைவர் சு.மணிமேகலை, பல்லடம் நகராட்சி ஆணையர் மனோகரன், நகராட்சி பொறியாளர் சுகுமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.