நாகர்கோயில் ஜூன் 16,
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியில் சாதாரண கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மாவட்ட திட்ட குழு மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லின் தாஸ் தலைமையில் 25.06. 2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற இருப்பதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் திட்டங்கள் தொடர்பான 02/24 முதல் 51 / 2024 வரையிலான மாதங்களுக்கான செலவினங்கள் மற்றும் அங்கீகாரம் செய்தல், வருவாய் துறை திட்டங்கள் குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல், காவல்துறை குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல்,போக்குவரத்து காவல்துறை குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல், தென்னக ரயில்வே குறித்து தெற்கு ரயில்வே திட்டங்கள் குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல், மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல் கதர் கிராம தொழில் வாரியம் குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.