மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோருக்கு நகராட்சி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை நகர் மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.
முகாமினை வாசன் கண் மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்தியது இதில் தூய்மை பணியாளருக்கான கண் பரிசோதனை முகாமை நகர் மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளருக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கண் நோய் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் கண் சிகிச்சை பெறுவோருக்கு சலுகை விலையில் கண் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுத்தது.
இந்த முகாமின் போது நகர் மன்ற துணைத் தலைவர் ஆதவன் அதியமான் கவுன்சிலர்கள் திருக்குமார் சின்னசாமி ஜஸ்டின்,வீரக்குமார் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் சுகாதார அலுவலர் சண்முகவேல் சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் முகம் ஒருங்கிணைப்பாளர் சூரிய பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.