மயிலாடுதுறையில் மிகப் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஐப்பசி மாத துலா உற்சவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும். வெளியூரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக மாயூரநாதர் திருக்கோயில் சன்னதி தெருவில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் நவீன வசதிகளுடன் 26 அறைகள் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் அம்பலவாணர் அருள் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்ட விடுதியை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமா சன்னிதானம் அம்பலமான தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து புதிய கட்டிடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இந்நிகழ்ச்சியில் சிவபுரம் வேத சிவகாம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் சதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



