திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மோரை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்ட முதல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்னதாக மோரை ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், இயற்கை உரம் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்களையும் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.கார்த்திக் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற செயலர் பி.வீரபத்திரன் (பொறுப்பு) மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.