கோவை நாடார் சங்கத்தின் சார்பில் காமராஜர் பெயரில் மண்டபம்
கோவை நாடார் சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்திற்கான கட்டுமான பணியினை நாடார் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆர். பாஸ்கரன் நாடார் துவக்கி வைத்தார்.
இந்த மணிமண்டபத்தில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த
அரங்கத்திற்கு கோவையில் வசித்து வரும் நாடார் சமூக மக்களின் ஆதரவோடு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களின். பங்களிப்போடும் பணியினை ஒரு வருட காலத்துக்குள் முடிப்பதென முடிவெடுத்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது பொதுச் செயலாளர் விமலராகவன், பொருளாளர் ராஜமாணிக்கம் துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், சந்தான பால்ராஜ், வாசகன், செயலாளர்கள் சபாபதி, சிலுவை முத்துக்குமார், விஜயகுமார் ஆகியோர் உட்பட இளைஞர் அணியினர் சூலூர் ஒன்றிய சங்க நிர்வாகிகள் நெல்லை காசி எட்வின் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



