நீலகிரி மாவட்ட தீயணைப்பு – மீட்பு பணிகள் துறை சார்பில் வீடுகள் தோறும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி பட்டாசுகளை அதிக சத்தத்துடன் வெடிப்பதை தவிர்க்கவும் பட்டாசுகளை சமையலறை, கேஸ் குடோன், பெட்ரோல் பங்க், மருத்துவமனை உள்புறம், பகுதியில் எடுத்துச் செல்லவோ வெடிக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர் மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும் அதனால் அவர்களின் காதுகள் மனம் பாதிக்கப்படும் எனவும் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க பெரியவர்கள் கவனமுடன் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு அதிக சத்தம் உள்ள பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருப்போம் விபத்தினை தவிர்ப்போம் என்கிற நோக்கோடு அவசர உதவிக்கு 101, 102 என்ற எண்ணிலும் அருகில் உள்ள தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள் கோத்தகிரி 04266-274101, ஊட்டி 0423-2442999, குன்னூர் 0423-2230101. என்ற தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில்லா தீபாவளி – வீடு தோறும் மகிழ்ச்சி, என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.