கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் நிரஞ்சனா நாட்டியாலயா பயிற்சி பள்ளி சார்பில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வின்னர் அலி கம்பம் 11வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சாதிக், ஆசிரியை ராஜிலா,வழக்கறிஞர் சார்னிகா வழக்கறிஞர் பிரகாஷ் ரத்தினம்மாள் மற்றும் பள்ளி நிறுவனர் நிரஞ்சனா & நிமிரஹ் , போட்டா பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவரும் மென்மேலும் குழந்தை செல்வங்கள் படிப்பிலும் நாட்டிய கலையிலும் மென்மேலும் உயர்ந்த இடங்கள் பெற்று தமிழக மற்றும் அல்லாது நமது தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என ஊக்கவித்தனர்.