தருமபுரியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நிக் ஷய்ஷிவிர் முகாம் விழிப்புணர்வு வாகன தொடக்க விழா நடந்தது. இதில் காசநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்றபின் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். எக்ஸ்ரே, சளி பரிசோதனை வசதியுடன் கூடிய இந்த வாகனம் 100 நாட்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று சக்கர நோவாளிகள், டையாலிஸ் செய்பவர்கள் ,காச நோயாளிகளின் குடும்பத்தினர், நீண்ட நாள் சளி, ரத்தத்துடன் சளி ஆகியோருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதுவரை 1686 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டதை கண்டறியப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொடர் சிகிச்சை காரணமாக 1565 பேர் குணமடைந்துள்ளனர் என துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இதில் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் காச நோய்க்கு எதிரான விழிப்புணர்வு அடங்கிய அட்டைகள் ஏந்தி கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இதில் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட சுகாதார ஆய்வாளர் ஜெயந்தி, தருபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி நாட்டன் மாது, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய் வந்த், மாவட்ட பொது மற்றும் தனியார் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மருத்துவர் அர்ச்சனா, குணசேகரன்,பாள் மருந்து எதிர்ப்பு காசநோய் ஒருங்கிணைப்பாளர் சக்கரவர்த்தி, மருந்து ஆய்வாளர் மாரியப்பன், ஜெயந்தி, முருகன், மாது, ஆரோக்கியராஜ், சுப்பிரமணி, சந்தோஷ், காதர் பாஷா, சேகர், சக்கரவர்த்தி, கார்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள், காசநோய் தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



