தென்தாமரைகுளம், ஜன. 02-
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலை மைப்பதியில் நேற்று புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை யொட்டி நள்ளிரவு 12 மணிக்கு சரவிளக்கு ஏற்றி திரு நடை திறக்கப்பட்டது,
சாமிதோப்பு குரு பால ஜனாதிபதி
வாழ்த்துரை வழங்கினார் அப்பொழுது இந்த புத்தாண்டு தினம் உலக புத்தாண்டு தினமாகும் எந்த மதத்திற்கும் எந்த நாட்டிற்கும் உரியதல்ல உலகத்திற்கு இது பொதுவானது கடற்கரையில் பொது இடங்களில் பொது இடங்களில் கூட்டமாக கூடி பல்வேறு நிலைகளில் கொண்டாடுவதை தவிர்த்து இறைவன் சன்னிதானத்தில் இறை அருள் வேண்டி வழிபடுவது சிறப்பானது அந்த சிறப்பை அய்யா வைகுண்டசாமி பற்றி தலைமை பதி உலகத்திற்கு எடுத்துச் சொல்கிறது அனைவருக்கும் நலமும் வளமும் பெற்று வாழ அய்யா வைகுண்டரின் அருளுக்கு வேண்டி வாழ்த்துகிறேன்.
புத்தாண்டு நிகழ்ச்சியில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் கிருஷ்ணமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், கூடுதல் பொதுச்செயலாளர் ஹாரிஸ் மற்றும் திரளான அய்யாவழி. மக்கலந்து கொண்டனர். பதிக்கு வருகை தந்த அனைவருக்கும் கை நீட்டம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு குருமார்கள்
பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு,ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் செல்லா,அம்ரிஷ் செல்லா,கவுதம் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.