மதுரை நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளி மாணவிகளுக்கு விநாயக் இன்ஸ்டியூட் நடத்திய நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல் உத்வேக பயிற்சி கருத்தரங்கு
மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளி
மாணவிகளுக்கு உயர் கல்வி மற்றும் நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு நிகழ்ச்சி
பள்ளித் தாளாளர்
அ.ஞானசௌந்தரி தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் சி.ஜோஸ்பின் ராணி முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மதுரை விநாயக் இன்ஸ்டியூட் நிறுவனத்தார் சார்பில்
600 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு
நீட் தேர்வு மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் உத்வேக பயிற்சி
கருத்துக்களை எடுத்துரைத்தனர்
நிகழ்ச்சியில் முன்னதாக விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற
தமிழ்நாடு பெஸ்ட் டீச்சர் அவார்டு பெற்ற ஆசிரியர் எஸ் விக்டர் மற்றும் ஹேமா மெடிக்கல் சென்டர் டைரக்டர் டாக்டர் ஹேமலதா ஆகியோருக்கு
பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு செய்தார்.