மதுரை ரயில் நிலையத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பயணிகளுக்கு
நீர் மோர் பந்தல்
கோடை காலத்தில் பயணிகளின் உள்ளத்தை குளிர்விக்க மதுரை ரயில் நிலையத்தில் இலவசமாக மோர் வழங்கப்படுகிறது. இதற்காக 400 லிட்டர் மோரை மதுரை தொழில் வர்த்தக சங்கம் வழங்குகிறது. இதன் மூலம் 2000 ரயில் பயணிகள் பயன்பெறுவார்கள். இந்த சிறப்பு ஏற்பாடு கோடை காலம் முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.