தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா, தருமபுரி மாவட்ட போக்குவரத்து காவல் துறை, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம், மற்றும் தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது. இந்த பேரணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “தலைக்கவசம் உயிர்க்கவசம், சீட் பெல்ட் அணிவதால் உயிரை காக்கலாம்”போன்ற கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் நேரு யுவ கேந்திரா சார்பில் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தருமபுரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் நேரு யுவ கேந்திரா தேசிய இளைஞர் தொண்டர்கள் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 100 – க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். நான்கு ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வர்களுக்கு எம் எல் ஏ சார்பில் பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியானது தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முன்னதாக நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட அலுவலர் அப்துல்காதர் வரவேற்புரை வழங்கினார். இதனை தொடர்ந்து தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதிரன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரகுநாதன், பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரசாத், வழக்கறிஞர் சுபாஷ் ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்கள். அதியமான் டிவியின் இயக்குநர் கபில்தேவ் கலந்து கொண்டார். முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அடுத்ததாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விடியோ ஒளிபரப்பப்பட்டது. அடுத்தாக இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தன்னார்வலர்களுக்கு டி சர்ட் மற்றும் தொப்பி நேரு யுவ கேந்திரா சார்பில் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் மற்றும் இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் அலுவலக பணியாளர் வென்னிலா மற்றும் பல்நோக்கு பணியாளர் முனியப்பன் ஆகியோர் செய்திருந்தார்.
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா, விழிப்புணர்வு பேரணி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics