தேசிய “ட்ரோன் செயல்திறன் “போட்டி !
கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம்!!
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில், பி.டெக்.ஏரோ நாட்டிக், மூன்றாமாண்டு மாணவர்கள், கவின் குமார்,அபிஷேக்.
கிரண்குமார், ஆகியோர் பேராசிரியர் ஜெசி மைக்கிளா ஆலோசனையில்
இரண்டு கிலோ எடையில் ட்ரோன் வடிவமைத்து,
சந்தீகர், பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற
“ட்ரோன் செயல்திறன்”
( ட்ரோன்வெர்ஸ்-4.0) போட்டிகள்,பளு தூக்குதல், குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி, துல்லிய இறக்கம் ஆகியவற்றில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
“இந்த ட்ரோன் செய்வதற்கு ஒரு லட்சம் ஆனது என்றும், போட்டிகளில் 100 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல மாநிலங்களிலிருந்து பங்கேற்றனர் “என்றும் மாணவர்கள் கூறினர்,
வெற்றி பெற்றவர்களுக்கு
கேடயம், ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை இந்திய ஏரோநாட்டிக் சங்க பிரதிநிதிகள் வழங்கினர்
ட்ரோன் போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களை,பல்கலை வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன், துணை தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் .வெ, வாசுதேவன், துறைத்தலைவர் ஆர்.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.



