By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் திடீர் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் திடீர் தர்ணா போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் திடீர் தர்ணா போராட்டம்

Last updated: December 2, 2024 9:49 am
December 2, 2024
62 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 30,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா(48) இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரிடம் இருந்து 30 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்து பிரேக் டான்ஸ் ராட்டினம் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். அந்த ராட்டினத்தை அவர் விலை கொடுத்து வாங்கிய ரமேஷிடமே வாடகைக்கு விட்டுள்ளார்.

 

   ரமேஷ் அதை ஒவ்வொரு ஊரிலும் பொருட்காட்சி நடக்கும்போது எடுத்துச் சென்று ராட்டினத்தை காட்சிப்படுத்தி, அதில் மக்களை ஏற்றி மகிழ்விப்பார். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ராட்டினத்திற்காக முதலீடு செய்த சகுந்தலாவுக்கு 50 சதவீதத் தொகையும், அதைக்கொண்டு தொழில் செய்யும் ரமேஷ்க்கு 50 சதவீதத் தொகையும் பகிரப்பட்டு வந்தது. இதேபோல் சகுந்தலாவுக்கு சொந்தமாக மரணக் கிணறும் உண்டு. இப்போது இவர்களது ராட்டினம் நாகர்கோவில், கன்கார்டியா பள்ளியில் நடந்துவரும் பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் சகுந்தலாவோ, ரமேஷோ இங்கே ராட்டினத்தை கொண்டுவரவில்லை. அவர்களிடம் இருந்து திருடி வினோத் என்பவர் போட்டுள்ளார். 

 

 வினோத் என்பவரிடம் இருந்து, ரமேஷ் இருபது லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்கு ரமேஷ், வினோத்திற்கு மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை கந்துவட்டியாகக் கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில் அதில் அவர் பாக்கிப் போட்டதால் வினோத், இந்த ராட்டினத்தை எடுத்துள்ளார். ராட்டினத்தின் உரிமையாளர் ரமேஷ் அல்ல. சகுந்தலா ஆகும். அவர் அந்தத் தொழிலில் முன் அனுபவம் உள்ள ரமேஷ்க்கு லாபப் பகிர்வு என்னும் முறையில் தொழில் செய்ய அனுமதி கொடுத்துள்ளார். இந்நிலையில், ரமேஷ் கொடுக்க வேண்டிய பணத்திற்கு ஈடாக சகுந்தலாவின் ராட்டினத்தை எடுப்பது எப்படி சரியாக இருக்கும்? 

 

   இதேபோல் ஏற்கனவே ரமேஷ் கொடுக்க வேண்டிய பணத்திற்காக சகுந்தலாவுக்குச் சொந்தமான மரணக் கிணற்றின் சில பாகங்களை இதே வினோத் எடுத்துச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக சகுந்தலா கொடுத்த புகார் மனுக்கள் திருவேற்காடு காவல் நிலையத்திலும், ஆவடி ஆணையர் அலுவலகத்திலும் நிலுவையில் உள்ளது. இதேபோல் சேலம் மாவட்டம், ஆட்டூர் பகுதியில் நடந்த பொருட்காட்சியிலும் சில பொருட்களை திருடிச் சென்றார். இதுகுறித்து கொடுத்த புகார் ஆற்றூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சகுந்தலாவிடம் இருந்து திருடிய ராட்டினத்தை கொண்டு தான் வினோத் நாகர்கோவிலில் கன்கார்டியா பள்ளியில் நடந்துவரும் பொருட்காட்சியில் கடை விரித்துள்ளார். சகுந்தலா இதை மீட்டுத்தரக்கேட்டு நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, போலீஸார் மீட்டுத் தருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். இவ்விவகாரத்தில் ரமேஷைக்கு கொலைமிரட்டல் விடுத்த  வினோத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஏனோ இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை,. 

 

அதேநேரம், ராட்டினத்தை இழந்து நிர்கதியாக நிற்கும் சகுந்தலா கொடுத்த புகாரின் பேரிலும் சி.எஸ்.ஆர் மட்டுமே  பதியப்பட்டுள்ளது. நாகப்பட்டிணத்தில் இருந்துவந்து நேசமணிநகர் காவல் நிலையத்தில் நீதி கிடைக்கும் என காத்திருக்கிறார் சகுந்தலா. ஆனால் காவல்துறையின் விசாரணையோ ஒருதலைபட்சமாக இருப்பதாக சந்தேகம் அடைந்து  யாரோ வாங்கிய கடனுக்காக தன் ராட்டினத்தை இழந்து நிற்கும் பெண் சகுந்தலாவுக்கு தொடர் மிரட்டல்களும் வருகிறது. ஒரு பெண்ணுக்கு கொடுத்திருக்கும் மன உலைச்சலுக்கும், அவர் தொழில் முடக்கத்திற்கும், வாழ்வாதாரம் இழப்பிற்கும்  காரணமானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ராட்டினத்தையும் அவரிடம் மீட்டு ஒப்படைக்க வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார். 

  தடைசெய்யப்பட்ட கந்து வட்டித் தொழிலை பகிரங்கமாக செய்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகள் போல் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு, கந்துவட்டித் தொழில் செய்யும் வினோத் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நேசமணிநகர் போலீஸார் இவ்விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால் சகுந்தலாவுக்கு நீதிகேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி களமாடும்.” என மாநகர மாவட்ட தலைவர் அல் காலித் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
செல்போன் டவர் மீது ஏறி சமூக ஆர்வலர் ஆர்ப்பாட்டம்
41 வது பிறந்தநாள் விழா
NIEPMD மற்றும் திண்டுக்கல் காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மூன்று நாட்கள் தொடர் மறுவாழ்வு பயிற்சி வகுப்பு
அமைச்சர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மார்த்தாண்டம் கிளை சார்பாக போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

July 1, 2025
27 Views
கன்னிகாபுரம் அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் மகாபாரத அக்னி வசந்த பெருவிழா
மகள் கொலை, மருமகன் மர்மசாவுக்கு
சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account