தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவை தவிர தினமும் இந்த கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏறாளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் 5 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3011 சுமங்கலி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன் சேவா பாரதி மற்றும் நிர்வாகிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சுமங்கலி பூஜையில் இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர். விழா நிறைவில் முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.