நாகர்கோவில் நவ 24
குமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக தலைமை அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு. தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய இந்திய ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாளில் கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி கழக தோழர்களுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் ஐ.கேட்சன், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன், பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், நிர்வாகிகள் சுதன்மணி, ரோச், அசோகன், வாத்தியார் செல்வகுமார் உட்பட பலர் உள்ளனர்.